கோவையில் இன்று பிரதமர் மோடியின் 'ரோடு ஷோ'

கோவையில் இன்று பிரதமர் மோடியின் ரோடு ஷோ

பிரதமர் நரேந்திர மோடி 

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணியை முன்னிட்டு 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பேரணி கோவையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.

கோவை சாய்பாபா காலனியில் மாலை 5:45 மணியளவில் ரோடு ஷோவை தொடங்கும் பிரதமர் மோடி, மாலை 6.45 மணியளவில் ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு செய்கிறார்.

வாகனப் பேரணி முடிவில் கோவை தொடர்குண்டு வெடிப்பில் பலியானவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார்.

Tags

Next Story