பெண்ணிடம் நகை பறிப்பு - போலிசார் விசாரணை !

பெண்ணிடம் நகை பறிப்பு - போலிசார் விசாரணை !

காவல் துறை

அரியலூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.
அரியலூர், மார்ச் 30- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நடந்துச் சென்ற பெண்ணிட் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இலுப்பையூர், சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி பொன்னம்மாள்(64). டேங்க் ஆப்ரேட்டர். வெள்ளிக்கிழமை காலை இவர், அங்குள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மின் மோட்டாரை இயக்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர், பொன்னாம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story