சேலம்: காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை - காவல்துறை தீவிர விசாரணை

சேலம்:  காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை - காவல்துறை தீவிர விசாரணை

சேலத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் அமானி கொண்டலாம்பட்டி சாமி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75) இவர் கொண்டலாம்பட்டி கரட்டூர் அருகே உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வேலைக்கு வந்த ஆறுமுகம் இன்று காலை கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தூங்கினார். இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story