பாஜக நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு - சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பாஜக நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு - சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றம் 

பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ்க்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜக ஓபிசி பிரிவு செயலாளர் வெங்கடேஷ் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடையவர், சரித்திர பதிவேற்று குற்றவாளி என்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். குற்ற வழக்குகளில் தொடர்புடையவருக்கு காவல் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags

Next Story