திருவாரூர் மாவட்டத்தில் 248 ரவுடிகள் வீடுகளில் போலீசார் ரெய்டு

திருவாரூர் மாவட்டத்தில்  248  ரவுடிகள் வீடுகளில் போலீசார் ரெய்டு

போலீசார் ரெய்டு 

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் வீடுகளிலும் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ,திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டையாகிய இடங்களில் அந்தந்த உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு 248 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை செய்யப்பட்டது. இதில் நன்னிலம் உட்கோட்டத்தில் தொடர் ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த சலிப்பேரி கிராமத்தினைச் சேர்ந்த செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .மேலும் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை உட்கோட்டங்களில் நான்கு ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குற்ற செயலில் ஈடுபடும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story