சத்தியமங்கலம் அருகே போலியோ சொட்டு மருந்து முகாம்

சத்தியமங்கலம் அருகே போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ முகாம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது போலியோ சொட்டு மருந்து முகாம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

முகாமை கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன்,அவர்கள் எம்ஜிஆர் நகர் அங்கன்வாடி மையத்தில் துவக்கி வைத்தார்.

மேலும் 100 குழந்தைகளுக்கு நகம் வெட்டி பரிசளித்து உற்சாகப்படுத்தினார், உடன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வடிவேலு, சாவித்திரி, ரங்கராஜ், வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, செயலாளர் யுவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story