போஸ்ட் மெட்ரிக் கல்வித் தொகையை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

போஸ்ட் மெட்ரிக் கல்வித் தொகையை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

திருமாவளவன்

போஸ்ட் மெட்ரிக் கல்வித் தொகையை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை ஜூலை 23 அன்று சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: ''போஸ்ட் மெட்ரிக் கல்வித் தொகையை 2025 வரையில் நீட்டிக்க வேண்டும், EWS பிரிவினருக்கு 8 லட்சம் வருமான உச்சவரம்பு சலுகையாக வழங்கப்பட்டு வரும் நிலையில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கும் 2.5 லட்சமாக உள்ள வருமான உச்ச 8லட்சமாக உயர்த்த வேண்டும், நிதிநிலை அறிக்கையில் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது அதனை உயர்த்த வேண்டும், குறைந்தது 1000 மாணவர்களுக்காவது வெளிநாடுகளில் கல்வி கற்க கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story