ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு: உயர்நீதிமன்றம் கருத்து

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு:  உயர்நீதிமன்றம் கருத்து

கோப்பு படம் 

ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் ரயில்வே துறை தரப்பில் தான் தவறு உள்ளது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை கோட்ட கண்காணிப்பாளர் ராம்குமார் மனுவுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் தெற்கு ரயில்வேவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்கு பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக அனுப்பிய கடிதத்துக்கு தெற்கு ரயில்வே தரப்பில் பதில் இல்லை என்றும் தபால் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பிக்க மார்ச் 25 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதிக்க இயலாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை தரப்பில் தான் தவறு என தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தியை தெரிவித்துள்ளது.

Tags

Next Story