ஆசனூர் மலை கிராமங்களில் 3வது நாளாக மின் வெட்டு
கோப்பு படம்
ஆசனூர் மலை கிராமங்களில் 3வது நாளாக மின் வெட்டு தொடர்கிறது
ஆசனூர் மலை கிராமங்களில் 3வது நாளாக மின் வெட்டு ஆசனுார் மலைப்பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள கம்பிகள் மீது மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் வினியோகம் தடைபட்டுள்ளது.
ஆசனுார், கேர்மாளம், திங்களூர் ஊராட்சிகளில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மூன்றாவது நாளாக நேற்றும் மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் மின் தடை ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் என்று கண்டு பிடிக்க முடி யாமல் மின்வாரியத்தினர் திணறி வருகின்றனர். அதேசமயம் பெரும்பாலான கம்பங்கள் மிகவும் பழையவை. எனவே அவற்றை அகற்றி விட்டு புதிய இரும்பு கம்பங்கள் அமைத்து, தடை யில்லா மின்சாரம் கிடைக்க, அதிகாரிகள் வழி வகை செய்ய, மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story