திருக்கோவிலூரில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூரில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூரில் பிரதோஷ வழிபாடு

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு, பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க, வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வர பெருமானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாரதனை,பிரதோஷ நாயகர் அலங்காரமண்டபத்தில் எழுந்தருளி, தீபாரதனை நடந்தது. பக்தர்களின் சிவபுராணம் முழங்க பிரதோஷ நாயகர் வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story