ஜாமீன் வழங்க வேண்டும் என்று பாலியல் புகாரில் கைதான பூசாரி மனு

ஜாமீன் வழங்க வேண்டும் என்று பாலியல் புகாரில் கைதான பூசாரி மனு

தனக்கு எதிராக புகாரளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று பூசாரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


தனக்கு எதிராக புகாரளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று பூசாரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
சென்னையை சேர்ந்த பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் கார்த்திக் முனுசாமி நேற்று கைது செய்யப்பட்டார். பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் தயாராகி உள்ளனர். இந்நிலையில், தனக்கு எதிராக புகாரளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தனக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை என புகார் அளித்த பெண் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags

Next Story