சேலத்தில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம்

சேலத்தில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம்

சேலத்தில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம் கட்டும் பணிதுவக்கம்.


சேலத்தில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி 56-வது வார்டு கலைஞர் நகர் 3-வது கிராஸ் பகுதியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார துணை மையம் கட்ட வேண்டுமென அந்த பகுதி மக்கள் சேலம் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவரும், வார்டு கவுன்சிலருமான ஏ .எஸ் .சரவணன் மூலம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் நகர்புற ஆரம்ப துணை சுகாதார மையம் கட்டும் பணிக்கு 15-வது மத்திய நிதி குழு 2023- 2024-ம் ஆண்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கியது. இதையடுத்து அந்த பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார். அப்போது மண்டல குழு தலைவர் அசோகன் , பகுதி செயலாளர் சரவணன், வார்டு செயலாளர் பம்பாய் முருகேஷ், பகுதி துணை செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story