சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகனப் பேரணி

சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகனப் பேரணி

பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை பாண்டிபஜாரில் உள்ள தியாகராய சாலையில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை பாண்டிபஜாரில் உள்ள தியாகராய சாலையில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். இன்று 7 ஆவது முறையாக அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். அவரின் வருகையை முன்னிட்டு 3,400 போலீசார் அடங்கிய பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்பட்டன.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பில் ஈடுபட்டனர். சென்னை தி நகர் பாண்டி பஜார் தியாகராய நகர் சாலையில் இருந்து தொடங்கிய வாகனப் பேரணி, சரியாக 1.8 கிலோ மீட்டர் தூரம் தொடரப்பட்டு, தேனாம்பேட்டை வரை நடைபெற்றது.

பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர் ரோட் சோவில் கலந்து கொண்டனர். ஒளிரக்கூடிய தாமரை சின்னத்தை கையில் ஏந்தி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாகனப் பேரணியில் பட்டு வேட்டி சட்டை அணிந்து ஈடுபட்டார் பிரதமர். சாலை இருபுறமும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story