விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் - அமைச்சர் மனோ தங்கராஜ்.

பால்வளத்துறையில் விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் என்றும், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், பால் வளத்துறையில் உள்ள விதிகள், சுற்றிக்கைகள், அறிவிப்புகள் போன்றவற்றில் சிறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறிய அவர், பால்வளத்தை அதிகமாக கொள்முதல் செய்தால் எப்படி கையாள்வீர்கள் என்று கேட்பதாகவும், தற்போது 18 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் எனவும் கூறினார்.

அதேபோல், பால் உற்பத்தியை மேலும் பெருக்க முடியும் என உத்தரவாதம் அளிப்பதாக கூறிய அவர், மாநிலத்தில் பாலின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அகவிலைப்படி உயர்வை 42%ல் இருந்து 46% ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார்.

Tags

Next Story