அறநிலையத்துறையால் தான் ஆலயங்களுக்கு பாதுகாப்பு  - அமைச்சர்

அறநிலையத்துறையால் தான் ஆலயங்களுக்கு பாதுகாப்பு  - அமைச்சர்
குளச்சலில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரெகுபதி
இந்தியா கூட்டணி 370 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மோடி ஆட்சி முடியப்போகிறது திமுகவை யாரும் அழிக்க முடியாது. அதிமுக பிளவு பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை முறை மோடி வந்தாலும் பாரதிய ஜனதா இங்கு காலூன்ற முடியாது. அறநிலையத்துறை இருப்பதால்தான் ஆலயங்கள் அனைத்தும் இன்று பாதுகாப்பாக உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் ,தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் அண்ணா சிலை சந்திப்பு அருகில் நேற்று இரவு நடந்தது. நகர செயலாளர் நாகூர் கான் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:- வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 370 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மோடி ஆட்சி முடியப்போகிறது திமுகவை யாரும் அழிக்க முடியாது. அதிமுக பிளவு பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை முறை மோடி வந்தாலும் பாரதிய ஜனதா இங்கு காலூன்ற முடியாது.

திமுக சமய வழிபாட்டிற்கு எதிரான கட்சி அல்ல. பாரதிய ஜனதா அறநிலையத்துறை வேண்டாம் என்கிறது. அறநிலையத்துறை இருப்பதால்தான் ஆலயங்கள் அனைத்தும் இன்று பாதுகாப்பாக உள்ளது. மோடி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார். தமிழ்நாட்டில் மோடிக்கும் பாரதிய ஜனதாவிற்கும் செல்வாக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ், ஒன்றிய செயலாளர் பி எஸ் பி சந்திர உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story