புதுக்கோட்டை மீனவர்கள் கைது - தமிழக மீனவர்கள் அச்சம்

புதுக்கோட்டை மீனவர்கள் கைது - தமிழக மீனவர்கள் அச்சம்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழக மீனவர்களிடையே அச்சமான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து 61 நாள் தடைக்காலத்திற்கு பின் மீனவர்கள் ஜூன் 15ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர் இந்நிலையில் மீனவர்களுக்கு அதிகமான மீன்கள் பிடித்து வந்த சந்தோஷத்தில் மீனவர்கள் இருந்து வந்த சூழ்நிலையில் நேற்று தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர் .

இந்நிலையில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது மேலும் பிடிபட்ட மீனவர்கள் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் என தெரிய வருகிறது.

மேலும் தடைக்காலம் முடிந்து மூன்றாவது கடல் சென்ற மீனவரின் ஒரு விசைப்படகு மற்றும் நான்கு மீனவர்களை இளைஞர் கடற்கரையால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் தற்போது தமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி உள்ளது மேலும் பிடிபட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags

Next Story