புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி எடப்பாடியுடன் சந்திப்பு

புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி எடப்பாடியுடன் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்த புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஒன்றை கேட்டதாக தகவல்.  

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்த புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஒன்றை கேட்டதாக தகவல்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி வி சண்முகம், அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சந்தித்தனர் அப்போது, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்து நேரில் சந்தித்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் அல்லது விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்டுள்ள நிலையில் இன்று சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்கு பின் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்டுள்ளோம் இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்து சென்றார்.

Tags

Next Story