நடைபயிற்சி செய்தவர்களை கடித்த வெறிநாய் - 5பேர் மருத்துவமனையில் அனுமதி

நடைபயிற்சி செய்தவர்களை கடித்த வெறிநாய் - 5பேர் மருத்துவமனையில் அனுமதி
வெறிநாய் கடித்த இடம்
நடைபயிற்சி செய்தவர்களை வெறிநாய் கடித்ததில் 5பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கல்லூரி சாலையில் காலையில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலோனோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதே போல இன்றும் காலையில் பலர் நடைபயிற்சி செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற வெறிநாய் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த பெண் உள்ளிட்ட 5 பேரை அடுத்தடுத்து கடித்து விட்டு தப்பி ஓடியது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் வெறிநாய் கடித்தவர்களை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

கல்லூரி சாலையில் நடைபயிற்சி செய்தவர்களை வெறிநாய் கடித்ததால் பரபரப்பானது. காரைக்குடி நகராட்சி நிர்வாகம் சாலையில் திரியும் தெரு நாய்களை கட்டுபடுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது

Tags

Next Story