நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை -ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை -ஒகேனக்கலில்  நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் 
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஐந்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில் தமிழக காவிரி கரையோரமான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்ரபாளையம், பில்லிகுண்டு ஆகிய பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் வனப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழக எல்லையான பில்லிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Tags

Next Story