காமராஜர் நினைவு இல்லத்தில் ராஜேஷ்குமார் எம் எல் ஏ மரியாதை

காமராஜர் நினைவு இல்லத்தில்  ராஜேஷ்குமார் எம் எல் ஏ  மரியாதை
 காமராஜரின் உருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை 
விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தில் காமராஜரின் உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பின்னர் காமராஜர் நினைவு இல்லத்தை சட்டமன்ற குழு தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் காமராஜரின் புகைப்படம் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் காமராஜர் இல்லத்திலிருந்து என்னுடைய சட்டமன்ற குழு தலைவர் பணியை தொடங்குகிறேன் எனவும் சட்டமன்ற குழு தலைவராக என்னை நியமித்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார் .

மேலும் பேசிய ராஜேஷ் குமார் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள் தொகுதி அளவில் உள்ள பிரச்சனை களை மட்டுமே பேசி வந்த எனக்கு தமிழக முழுவதும் உள்ள பிரச்சினையை பற்றி பேசுவேன் என்றார். மேலும் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக நவோதயா பள்ளி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தற்போது ஆட்சி முடியும் நேரத்தில் வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும் தவிர செயல்பாட்டுக்கு வருவதில் லை என்றார். மேலும் மத்திய அரசு பல திட்டங்களை கூறிவிட்டு நல்ல திட்டங்களை நிறைவேற்றாமல் மத்திய அரசு இருப்பதாகவும் கூறினார் மேலும் பேசிய ராஜேஷ்குமார் ஏற்கனவே பலமுறை பிரதமர் தமிழகமும் வந்து சென்றுள்ளார் அவர் சென்ற பிறகு எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை என்றார்.

அதே போன்று நிச்சயமாக அவர்கள் நினைத்தது மாதிரி எந்த வித மாற்றமும் தமிழகத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை எனவும் அதே போல் அகில இந்திய அளவிலும் நிச்சயமாக வரக் கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவார் கள் என்பது தான் உண்மை என்றார் மேலும் பேசிய அவர்கள் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மதிப்பளிக்க கூடிய அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்றார். அதனை தொடந்து செய்தியாளர் களிடம் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பாஜக கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தது அந்த மாநிலங்களில் எல்லாம் மது ஒழிக்கப்பட்டு விட்டதா என கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர் அண்ணாமலையை பொருத்த வரையில் தொடர்ந்து புலிகளிலேயே சொல்லி வரும் அண்ணாமலை எப்போதுதான் உண்மையை பேச போகிறார் என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 40 தொகுதி களையும் கைப்பற்றினால் நான் அரசியலை விட்டு செல்வதாகவும் அதேபோல் 40 தொகுதிகளை பாஜக கைப்பற்றாவிட்டால் மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியலை விட்டு செல்வாரா ? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் மத்தியில் இந்தியா கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும் போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அழிக்கப்படும் எனவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட்டை பற்றிய அறிக்கை தெளிவாக இருக்கும் என்றார்.

Tags

Next Story