தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நினைவு நாளில் நினைவு கூர்வோம் - பாமக நிறுவனர்

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நினைவு நாளில்  நினைவு கூர்வோம் - பாமக நிறுவனர்

ராமதாஸ் 

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நினைவு நாளில் அவரது செயல்களை நினைவு கூர்வோம் என பாமக நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 43-ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழர்களை முன்னேற்ற வேண்டும், அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சி.பா. ஆதித்தனார் உறுதியாக இருந்தார். தமிழ் மொழி மீதும் அவர் தீராப்பற்று கொண்டிருந்தார். அதற்காக சி.பா. ஆதித்தனார் ஏராளமான பணிகளைச் செய்தார். அதனால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழர் தந்தையின் நினைவு நாளில் தமிழுக்காகவும். தமிழர் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வோம்.

Tags

Next Story