பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

மாவீரன் ஜெ.குரு ஆற்றிய அரும்பணிகளை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம்; போற்றுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


மாவீரன் ஜெ.குரு ஆற்றிய அரும்பணிகளை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம்; போற்றுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்னியர் சங்கத்தின் தலைவராகவும், எனது தீவிர விசுவாசியாகவும் வாழ்ந்த மாவீரன் ஜெ.குருவை இன்று தான் இயற்கை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. அவன் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், என் மனதை விட்டு மறையவில்லை. அவனை நான் நினைக்காத நாளில்லை. எனது கட்டளைப்படி கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மறக்க முடியாதவை. மாவீரன் ஆற்றிய பணிகளையும், செய்த தியாகத்தையும், காட்டிய வீரத்தையும் இந்நாளில் மட்டுமின்றி, எந்நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம். காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. கல்விக் கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு இன்று மாலை நான் மரியாதை செலுத்துகிறேன். இந்த நாளில் அனைவரும் மாவீரனுக்கு மரியாதை செலுத்துங்கள்.

Tags

Next Story