மீண்டும் வெளியாகிய கில்லி படம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ள நடிகர் விஜய் நடித்துள்ள கில்லி படத்தை காண ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, பேனருக்கு பால் ஊற்றி கொண்டாடினர்.

நடிகர் விஜய் நடிகை திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு திரையரங்கில் இன்று திரையிடப்பட்டுள்ளது. மீண்டும் திரையிடப்படும் கில்லி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலையிலே பல்வேறு திரையரங்கில் முதல் காட்சி ஆனது முழுவதும் நிரம்பியுள்ளது. இரண்டாம் காட்சிக்கு இணையம் மூலம் அனைத்து டிக்கெட்டுகளும் முழுமையாக விற்று தீர்ந்துள்ளது ரோகிணி திரையரங்கில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் வைத்து ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அம்பத்தூர் முருகன் திரையரங்கில் நடிகர் விஜய் பேனருக்கு பால் ஊற்றியும் பட்டாசு வெடித்தும் 1000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொண்டாடினர். விஜய் பாடலுக்கு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பல மாவட்டங்களிலும் திரையரங்குகளில் அனைத்து இடங்களும் நிரம்பி இருக்கின்றன. திரையரங்கில் படம் திரையிடப்படும் பொழுது ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சீனுக்கும் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி நடனமாடி கில்லி படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story