யூடியூபர்க்கு எதிராக பிறப்பித்த உத்தரவு ரத்து செய்ய மறுப்பு

அப்சரா ரெட்டிக்கு எதிராக கருத்து தெரிவித்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு கருத்து தெரிவித்ததற்காக அதிமுக செய்தித்தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி யூ டியூபர் ஜோ மைக்கேல் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்ததும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு தெரியும் என்று அப்சரா ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story