வாக்குபதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் விதிமுறை - ஆர் எஸ் பாரதி வழக்கு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது என்றும் வாக்குபதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரங்கள் வைக்க எந்த விதிகளும் வகை செய்யவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை வைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story