கண்டாச்சிபுரத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கண்டாச்சிபுரத்தில்  சாலை  ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம் 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. விழுப்புரம் திருவண்ணாமலை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வணிக நிறுவனங்கள் ஹோட்டல் டீ ஸ்டால் உள்ளிட்ட கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து இடத்தை அனுபவித்து வந்தனர். நெடுஞ்சாலைத் துறை சார்பில் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வராத காரணத்தால் போலீசார் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றி அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags

Next Story