எம்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய கோரிக்கை

எம்.ஆர்.பி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும், என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், எம். ஆர். பி தேர்வுகளை அறிவித்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதில் சில கோரிக்கைகள் எங்களுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மத்தியில் வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது. அரசு உதவி மருத்துவர்கள் பணியிடங்களுக்கான எம்.ஆர்.பி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிநாளை , தற்பொழுது பயிற்சி மருத்துவம் மேற்கொள்ளும் 8000 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக, மே 15 ஆம் தேதியிலிருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்ய வேண்டும். கால நீடிப்பு செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story