1 முதல் 9 ஆம் வகுப்பு இறுதி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க கோரிக்கை

1 முதல் 9 ஆம் வகுப்பு இறுதி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க கோரிக்கை

நெல்லை முபாரக்

ரம்ஜான் பண்டிகையை கருத்தில் கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஏப்ரல் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகையும் அமைய வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே அதனை கருத்தில்கொண்டு, தமிழக அரசு ஏப்ரல் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் தேர்வுகள் இல்லாத வகையில் பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story