பட்டதாரி மாணவர்களுக்கு பக்குவம் இல்லை: வருவாய் துறை அமைச்சர் பேச்சு

பட்டதாரி  மாணவர்களுக்கு பக்குவம் இல்லை: வருவாய் துறை அமைச்சர் பேச்சு
X

வருவாய்த்துறை அமைச்சர்

பட்டதாரி மாணவர்களுக்கு பக்குவம் இல்லை என்றும், பக்குவப்பட பயிற்சி தேவை என வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தென்காசி பாராளுமன்ற தொகுதி எம்பி தனுஷ் எம் குமார் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர் 2000க்கும் மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கான சான்றிதழ் அமைச்சர் வழங்கினார்.முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நாங்கள் படித்த காலத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்தால் போதும் என எனது தகப்பனார் கூறினார் அப்போது அதுவே பெரிய படிப்பாக இருந்தது ஆனால் தற்போது அனைவருமே டிகிரி முடித்துவிட்டு தான் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் 8000 சம்பளத்திற்கு கோவிலில் வேலை என்று அறிவிப்பு வந்தால் 13000 பேர் விண்ணப்பம் செய்கின்றனர் அதில் அனைவருமே பட்டதாரிகள்.பட்டம் படித்த மாணவ மாணவிகளுக்கு பக்குவம் இல்லை பக்குவப்படுவதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் பயிற்சி பெற வேண்டுமென அமைச்சர் பேசினார் ஆகையால் தான் தமிழக முதல்வர் நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வேலையிலதவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கும் விதமாக இது போன்ற முகாம் நடைபெற்று வருகிறது 100 முகாம் நடத்த வேண்டும் என்று சென்னார்கள் இது மூன்றாவது முகமாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடைபெற்றுள்ளது படித்த மாணவ மாணவிகள் பக்குவத்துடன் கிடைக்கின்ற வேலையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story