வாவறை ஊராட்சி பகுதியில் வீடுகளை சூழ்ந்த ஆற்று வெள்ளம்

வாவறை ஊராட்சி பகுதியில் வீடுகளை சூழ்ந்த ஆற்று  வெள்ளம்
ஆற்று வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்ட அமைச்சர் .
குமரி மாவட்டத்தில் வாவறை ஊராட்சிக்கு உட்பட்ட மாமுகம் என்ற பகுதியில் உள்ள நெய்யாறு இடதுகரை கால்வாய் வழியாக நேற்று காலை ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் மாமுகம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் சில வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் நேற்று காலை பள்ளிக்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களை அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்எல்ஏ, பத்மநாபபுரம் சப் கலெக்டர் கௌஷிக் , கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் சந்தித்து அரசு தரப்பில் உரிய உதவிகள் செய்யப்படும் என்று கூறினார்கள். தொடர்ந்து முகாமில் தங்கி இருந்த 164 நபர்களுக்கு வாவறை ஊராட்சி தலைவர் மெற்றில்டா தலைமையில் மதிய உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story