மேல்புறத்தில் சாலை சீரமைப்பு பணி 

மேல்புறத்தில் சாலை சீரமைப்பு பணி 

மேல்புறத்தில் சாலை சீரமைப்பு பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

மேல்புறத்தில் சாலை சீரமைப்பு பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் குழித்துறை முதல் ஆலஞ்சோலை வழியாக செல்லும் சாலைப் பணிக்கு சுமார் ரூ.5.3 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை மேல்புறம் சந்திப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மேல்புறம் வடக்கு ஒன்றிய செயலாளர் சைனி கார்டன், பேரூர் செயலாளர் ஜெபக்குமார், அவை தலைவர் சிவனேசன், புலியூர்சாலை ஊராட்சி தலைவர் லிட்டில் பிளவர், இடைக்கோடு பேரூராட்சித் துணைத் தலைவர் ஷாஜி, வார்டு உறுப்பினர்கள் ராஜன் ஷர்ஜிலிரன், கிறிஸ்துதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story