குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர்

 முதல்வர் மு.க.ஸ்டாலின் 

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் நாட்டில் நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்திட நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Tags

Next Story