ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் விவகாரம் - வருமான வரித்துறை விசாரணை

ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் விவகாரம்  - வருமான வரித்துறை விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட பணம் 

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்தார்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது தொடர்பாக வருமான வரித்துறை தான் விசாரணை செய்வார்கள். இதன்படி பறிமுதல் தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story