நவம்பர் 1 முதல் தீவு திடலில் பட்டாசு விற்பனை- விற்பனையாளர்கள் பேட்டி

நவம்பர் 1 முதல் தீவு திடலில் பட்டாசு விற்பனை-  விற்பனையாளர்கள் பேட்டி

பட்டாசு விற்பனை

நவம்பர் 1 முதல் தீவு திடலில் பட்டாசு விற்பனை...55 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,முழுவதும் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என விற்பனையாளர்கள் பேட்டியளித்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும்...இந்த ஆண்டு நடைபெற உள்ள பட்டாசு விற்பனை குறித்து பட்டாசு வணிகர்கள் நல சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்...

தீவு திடலில் இந்த ஆண்டு 55 பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என கூறினர்..m

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்படாது எனவும் முழுவதும் பசுமை பட்டாசுகள் மட்டும் தான் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தனர். நவம்பர் 1 ஆம் தேதி முதல் கடைகள் திறக்கப்பட உள்ளதாகவும் அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் தான் பட்டாசுகள் விற்பனை செய்யப்படும். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யப்படும்...தீ விபத்தை தடுக்கும் வகையில் அனைத்து கடைகளிலும் முன்னெச்சரிக்கை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது...

Tags

Next Story