மணல் கடத்திய மூவர் கைது

மணல் கடத்திய மூவர் கைது

கைது 

கோவிந்த ரெட்டிபாளையம் ஏரியில் மணல் கடத்திய மூவரை கையும் களவுமாக பிடித்து தனிப்படை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் , பாகாயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவிந்தரெட்டிபாளையம் ஏரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக இன்ஸ்பெக்டர் காண்டீபனுக்கு இன்று (23.03.2024) தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணல் கடத்திக் கொண்டிருந்த கோவிந்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த இளைய குமார், திருமால் மற்றும் சிவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய மூவரை கைது செய்து, பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி வாகனமும் போலீசாரல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story