ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்

சாந்தன் 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த சாந்தன் சமீபத்தில் விடுதலை அடைந்தார். அவர் உடல் நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தன் கல்லீரல் பிரிவில் தீவிர சிகிச்சையில் இருந்தார். லிவர் பையாசி என்று சொல்லக்கூடிய தசையினை எடுத்து ஆய்வு செய்யக்கூடிய சிகிச்சைக்கு மறுத்துவிட்டார் சாந்தன். நேற்று இரவில் இருந்தே அவர் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்றும், செயற்கை சுவாசம் மூலமாக தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7: 50 மணியளவில் உயிரிழந்துள்ளார் என்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் அறிவித்தார்.

அவர் உடல் உடற் கூறாய்விர்க்கு பின் இலங்கை செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சாந்தனின் பூர்வீக கிராமத்திற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட உள்ளது. இலங்கை செல்வதற்கு சில நாட்களுக்கு முன் மத்திய அரசிடம் அனுமதி பெற்றநிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். சாந்தன் உடலை பார்க்க ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்தனர்.

Tags

Next Story