சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்

சவுக்கு சங்கர் கைது வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அவதூறு வழக்கில் யூ-டியூபா் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டம், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரின்பேரில் சவுக்கு சங்கா், யூ-டியூப் சேனலின் உரிமையாளா் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோா் மீது திருச்சி மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பின்னா் பெலிக்ஸ் ஜெரால்டை தனிப்படை போலீஸாா் தில்லியில் கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்திய நிலையில், அவரை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில் மேற்கண்ட வழக்குத் தொடா்பாக கோவை மத்திய சிறையிலிருந்து யூடியுபா் சவுக்கு சங்கரை ஆய்வாளா், இரு உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான 10 போ் கொண்ட தனிப்படையினா் பலத்த பாதுகாப்புடன் வேன் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை பிற்பகல் கொண்டு வந்தனா். தொடா்ந்து திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி டி. ஜெயப்பிரதா முன்னிலையில் அவரை ஆஜா்படுத்தினா். அப்போது நீதிமன்ற வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். அரசுத் தரப்பு வழக்குரைஞா் கே. ஹேமந்த், சிறப்பு அரசுத் தரப்பு வழக்குரைஞா் எம்.கே. ஜாகீா்உசேன், சவுக்கு சங்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முல்லை சுரேஷ் உள்ளிட்டோா் வைத்த வாதங்களை நீதிபதி கேட்டாா்.

அப்போது, கோவையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரும் வழியில் வேனில் வைத்து, தன்னைப் பெண் போலீஸாா் கடுமையாகத் தாக்கி, மன்னிப்புக் கேட்க வைத்து விடியோ எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் உயரதிகாரிகளுக்கு அனுப்பியதாக சவுக்கு சங்கா் தெரிவித்தாா். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து விட்டு ஆஜா்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டாா். இதன்பேரில் போலீஸாா் சவுக்கு சங்கரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதையடுத்து மாலையில் மீண்டும் சவுக்கு சங்கா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், தன்னைத் தாக்கிய போலீஸாரை அடையாளம் காட்டுவதாகத் தெரிவித்தாா். இதையடுத்து அவரை வேனில் அழைத்து வந்த போலீஸாா் நீதிமன்றத்துக்குள் அழைக்கப்பட்டு சவுக்கு சங்கரால் அடையாளம் காட்டப்பட்டனா்.

அப்போது பெண் போலீஸாா், பெயா் வில்லை அணியாதது குறித்து நீதிபதி கேட்டதற்கு, சவுக்கு சங்கா் யூடியூப்பில் போட்டு விடுவாா் என்பதால் அணியவில்லை என்றனா். இதையடுத்து நீதிபதி, அனைவரது பெயரையும் எழுதிக் கொண்ட நிலையில், போலீஸாருக்கு சவுக்கு சங்கா் மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரை காவலில் எடுக்கவும் விண்ணப்பிக்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கரை வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து, காவலில் எடுப்பது தொடா்பான விசாரணைக்காகவும், எதிா்தரப்பினா் போலீஸாரை குறுக்கு விசாரணை செய்யவும் வியாழக்கிழமை பிற்பகல் மீண்டும் சவுக்கு சங்கரை ஆஜா்படுத்தும்படியும் தனது உத்தரவில் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் சவுக்கு சங்கரை லால்குடி கிளைச் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனா்.

முன்னதாக சவுக்கு சங்கரை திருச்சி நீதிமன்ற வளாகத்துக்கு போலீஸாா் கொண்டு வந்த நிலையில், சிந்துஜா என்ற பெண்ணின் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள், சவுக்கு சங்கருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், மாலையில் லால்குடி கிளைச் சிறைக்கு கொண்டு சென்றபோதும் பெண்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக முழக்கமிட்டனா். சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையிலிருந்து வேன் மூலம் திருச்சிக்கு கொண்டு வரும் வரையிலும், திருச்சி நீதிமன்ற வளாகத்திலும், திருச்சியிலிருந்து லால்குடி கிளை சிறைக்கு கொண்டு சென்றபோதும், முழுக்க முழுக்க பெண் போலீஸாரே காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பெண் போலீஸாரைப் பற்றி அவதூறாகப் பேசியதால் பெண் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story