சக்தி மசாலா நிறுவனத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது விழா; உச்சநீதிமன்ற நீதியரசர் பங்கேற்பு!!

சக்தி மசாலா நிறுவனத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது விழா; உச்சநீதிமன்ற நீதியரசர் பங்கேற்பு!!

sakthi masala award

கோவையில் நடைபெறும் சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது விழாவில் உச்சநீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் பங்கேற்று எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு விருதினை வழங்க உள்ளார்.

கோவையில் சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது விழா 2024 இன்று (15.09.2024 - ஞாயிறு) மாலை நடைபெற உள்ளது. பீளாமேட்டில் உள்ள பூ.சா.கோ. பொறியியற் கல்லூரி D.அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள இந்த விழாவில் விஜயா வாசகர் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டிற்கான கி.ரா.விருது மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் ரொக்கப்பரிசும் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. ஆர்.மகாதேவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், சக்தி மசாலா நிறுவனங்கள் மேலாண்மை இயக்குநர் டாக்டர். பி.சி.துரைசாமி, சக்தி மசாலா நிறுவனங்கள் மேலாண்மை இயக்குநர் டாக்டர். சாந்தி துரைசாமி, எழுத்தாளர் திரு.ஆத்மார்த்தி, எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகத்தின் திரு.மு.வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Tags

Next Story