பள்ளி மாணவன் தற்கொலை

பள்ளி மாணவன்  தற்கொலை

பள்ளி மாணவன் தற்கொலை

கலவை அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ,கலவை அருகில் உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்.டிரைவரான இவரின் மனைவி சந்தியா. அவர்களுக்கு 2 மகன்கள் உண்டு. மூத்த மகன் மிதுன் 10-ம் வகுப்பும், 13 வயது மதிக்கத்தக்க இளைய மகன் ஸ்ரீராம் 8-ம் வகுப்பும் முடித்துள்ளனர். கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த ஸ்ரீராம் விளையாடி கொண்டிருந்தான்.

மாலை வீட்டின் முன்பு போடப்பட்டுள்ள ஷீட்டு குழாயில் இளைய மகன் ஸ்ரீராம் கயிறால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அதைப் பார்த்த தாயார் சந்தியா கூச்சலிட்டு கதறினார். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் இருந்து ஸ்ரீராமை கீழே இறக்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வாழைப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

13 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story