குடியாத்தத்தில் பள்ளி மாணவன் மாயம்

குடியாத்தத்தில் பள்ளி மாணவன் மாயம்

மாயம் 

குடியாத்தம் வள்ளலார் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர், மாதனூரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி, ஆம்பூர் சர்க்கரை ஆலை அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். தேர்தல் அன்று அவரது தாயார் ஓட்டுப்போடுவதற்காக சென்றிருந்தார். வீட்டில் மாணவர் மட்டும் தனியாக இருந்தார்.

தாயார் ஓட்டுப்போட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் மாணவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன பள்ளி மாணவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story