வெள்ள பாதிப்பை காரில் இருந்தபடியே பார்த்த சீமான்

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த சீமான், காரிலிருந்து இறங்காமல் அப்படியே பார்த்ததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தை பாதித்த பகுதிகளை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பார்வையிட வந்தார் தூத்துக்குடி அண்ணா நகர் முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் காரில் இருந்தபடியே இருந்து விட்டு அங்கிருந்து அப்படியே சென்று விட்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய செய்திகளில் கனமழை பெய்த காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெள்ள சேதங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தனர். சேதங்களை பார்வையிட வந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தூத்துக்குடி அண்ணா நகர் முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காரில் இருந்தபடியே அமர்ந்து இருந்துவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டார்.

Tags

Next Story