உணவகத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

உணவகத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

கைதானவர் 

அரியலூர் மாவட்டம்,கீழப்பழுவூரில் செட்டிநாடு சிமென்ட் ஆலை உணவகத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலை உணவகத்தில் 400 பாக்கெட் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் கீழப்பழுவூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன்(55) என்பவர் உணவகம் (கேண்டீன்) நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அந்த உணவகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழப்பழுவூர் காவல் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில், உணவகத்தில் 400 பாக்கெட்கள் ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story