செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரிப்பு

கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1400 கன அடியாக அதிகரித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரக்கூடிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று ஏரியின் நீர்மட்டமும் 24 அடியில் 22 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 3159 மில்லியன் கன அடியும் நீர்மட்டம் 24 அடியில் 22.15 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story