தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு!

தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு 90 சதவீத பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு 90 சதவீத பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1122 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான பேனா, பென்சில், காகிதம், அனைத்து படிவங்கள், கவர், சீல், மை, கயிறு, துணி, அரக்கு, நூல், பசை, பிளேட், பாலித்தீன் அட்டைகள், பூத் சிலிப் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் மற்றும் படிவங்கள் என மொத்தமாக 127 பொருட்கள் அனைத்தும் தயார் படுத்தப்பட்டு, உரிய முறையில் ஆய்வு செய்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு 90 சதவீத பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சியுள்ள பொருட்கள் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.பின்னர், அங்கிருந்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மேற்படி பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்லப்படும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story