வழக்கை தள்ளிவைக்க கோரிய செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

வழக்கை தள்ளிவைக்க கோரிய செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

  பைல் படம்

சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை அமலாக்கத் துறை வழக்கை தள்ளி வைக்க செந்தில் பாலாஜி கோரியிருந்த வழக்கு நாளை விசாரிக்கப்படுகிறது.
சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை அமலாக்கத் துறை வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி கோரியிருந்தார். அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்க கோரிய செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை. அமலாக்க துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே முறையீடு செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Tags

Next Story