போலி மதுபாட்டில்கள் கடத்திய ஏழு பேர் கைது

போலி மதுபாட்டில்கள் கடத்திய ஏழு பேர்  கைது

கைது செய்யப்பட்டவர்கள்


வேனில் ரகசிய அறை வைத்து போலி மதுபான பாட்டில்கள் கடத்திய 7பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சோலாரில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த கார் மற்றும் வேனை சோதனை செய்ததில் காரில் 384 மது பாட்டில்களும் , வேனில் ரகசிய அறை அமைத்து 2016 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடந்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இரு வாகனங்களில் வந்த ஆதவன்,சங்கர்,நிஜான்,செல்வம்,விக்னேஷ், விஜயகுமார் மற்றும் சத்தியராஜ் ஆகிய ஏழு பேரையும் கைது செய்து 2400 போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

Tags

Next Story