ஜெயங்கொண்டம் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

ஜெயங்கொண்டம் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் உள்ளிட்ட கோயில்களில் நேற்று நந்தியம்பெருமானின் பிரகார உலா நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் பகுதி சிவாலயங்களில் சனி பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் 06.04.24 இன்று நடைபெற்ற பிரதோஷ வழிபாடுகளில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர். திருத்துளார் அருளுடைய நாதர்.வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், ஸ்ரீபாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர், தா பழூர் சுந்தரே,காரைக்குறிச்சி பசுபதி ஈஸ்வரர், உள்ளிட்டஸ்வரர் சிவன்கோவில்களில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது.

விழாவில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால்,தேன், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. சனி பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள், பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கங்கைகொண்ட சோழபுரம்பிரகதீஸ்வரர், ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் ஆகிய கோயில்களில் 6.04.24 இன்று நந்தியம்பெருமானின் பிரகார உலா நடைபெற்றது.

Tags

Next Story