சென்னை நிவாரண பணிகளை போன்று தான் தென் மாவட்டங்களிலும் அரசால் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - அமைச்சர் முத்துசாமி

சென்னை நிவாரண பணிகளை போன்று தான் தென் மாவட்டங்களிலும் அரசால் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது - அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பேரூராட்சி நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தா். அப்போது , முதல்வரின் டெல்லி பயணத்தில் தமிழகத்திற்கான வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரிடம் கேட்டு பெறும் திட்டம் இருந்தது எனவும் முதல்வர் டெல்லி பயணம் அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுகளாக தான் உள்ளது என்றும், முதல்வர் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார். பிரதமரை சந்திக்கவில்லை என்றால் ஏன் பிரதமரை சந்திக்கவில்லை என எதிர்கட்சிகள் கேட்பார்கள் என்ற அமைச்சர் முத்துசாமி சென்னை மீட்பு நிவாரண பணிகளை போன்று தான் தென் மாவட்டங்களிலும் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் , சென்னையில் இன்னும் பணிகள் இருப்பதால் மூத்த அமைச்சர்கள் அனுப்ப முடியவில்லை என்றும் அவசியம் இருந்தால் நிறைய அமைச்சர்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு முன்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்பட்டடது என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Tags

Next Story