கடம்பூரில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

கடம்பூரில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் சுற்றி திரிந்த ஒற்றையானையால் பரபரப்பு நிலவியது


கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் சுற்றி திரிந்த ஒற்றையானையால் பரபரப்பு நிலவியது
கடம்பூரில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் சுற்றி திரிந்த ஒற்றையானையால் பரபரப்பு நிலவியது. சத்தி புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சி எக்கத்தூர் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது. யானை ஊருக்குள் நடமாடியதை கண்ட பொதுமக்கள் யானையை சத்தம் போட்டு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஓடியது, இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story