ரயிலில் பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்..!

ரயிலில் பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்..!

ரயிலில் பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்

சீர்காழி ரயில் நிலையத்தில் முதல்வர் வருகையை ஒட்டி அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு.

மயிலாடுதுறை அருகே ரூ.144 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் 4 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3ம் தேதி இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் சீர்காழிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருவெண்காடு சென்று தங்குகிறார்.

பின்னர், 4ஆம் தேதி காலை திருவெண்காட்டில் இருந்து காரில் புறப்பட்டு மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.

இந்த நிலையில் சீர்காழி ரயில் நிலையத்தில் சாலை வசதி பாதுகாப்பு வசதிகள் குறித்து தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் மாலை ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்

Tags

Next Story